மத மாற்ற டார்ச்சர்: பெண் தீக்குளிக்க முயற்சி!

மத மாற்ற டார்ச்சர்: பெண் தீக்குளிக்க முயற்சி!

Share it if you like it

மத மாற வற்புறுத்துவதாகக் கூறி பெண் ஒருவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது கருப்பகுடும்பன்பச்சேரி என்கிற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. ஹிந்துவான இவரை, அக்கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறார்களாம். மேலும், தன்னை தொந்தரவு செய்வதோடு, தனது மகனையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்லி அடித்து துன்புறுத்தி வருகிறார்களாம். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் வளர்மதி புகார் கொடுத்தும், போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லைாயம்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வளர்மதி, இன்று காலை கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ராமநாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அங்கு யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் வளர்மதியை தடுத்து, உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். மேலும், வளர்மதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வளர்மதி கூறுகையில், மதம் மாறச் சொல்லி தன்னையும், தனது மகனையும் தொந்தரவு செய்யும் நபர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் சேகரிடம் கேட்டபோது, இது சம்பந்தமான புகார்கள் இதுவரை வரவில்லை. தற்போது வந்திருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Share it if you like it