‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க கோரி இடைநிலை ஆசிரிய ர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலை, இரவு நேரங்களில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த நிலையில் உண்ணாவிரத்தில் கலந்து கொண்டவர்களில் 17 ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர்.