தெலங்கானா அமைச்சர் மீது சேர், செருப்பு, கல் வீச்சு!

தெலங்கானா அமைச்சர் மீது சேர், செருப்பு, கல் வீச்சு!

Share it if you like it

தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவை புகழ்ந்து பேசிய அம்மாநில அமைச்சர் மல்லா ரெட்டி மீது கூட்டத்தினர் கல், சேர், செருப்பு வீசி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் காட்கேசர் என்ற இடத்தில் அரசியல் சார்பற்ற சமூகத் தளமான ரெட்டி ஜாக்ருதி, ரெட்டி சிம்ம கர்ஜனா என்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நேற்று நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய மல்லா ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவை புகழ்ந்து பேசினார். இதனால், ஆத்திரமடைந்த கூட்டத்தினர், மல்லா ரெட்டிக்கு எதிராக கோஷமிட்டனர். ஆனாலும், தொடர்ந்து கே.சி.ஆரை புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார் மல்லா ரெட்டி. இதனால், ஆத்திரமடைந்த கூட்டத்தினர், மல்லா ரெட்டியை நோக்கி சேர், செருப்பு மற்றும் கல்களை வீசினர்.

இதையடுத்து, போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். மேலும், மல்லா ரெட்டியை சுற்று பாதுகாப்பு வளையம் அமைத்தனர். ஆனாலும், கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு புறப்பட்டார் மல்லா ரெட்டி. போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனாலும், காரை பின்தொடர்ந்து சென்ற கூட்டத்தினர், மல்லா ரெட்டி கார் மீது சேர்கள், கற்கள், செருப்புகளை வீசினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Share it if you like it