கொரோனாவை ஒழித்தவர் ஏசுதான் – அரசு  அதிகாரி சர்ச்சை பேச்சு!

கொரோனாவை ஒழித்தவர் ஏசுதான் – அரசு அதிகாரி சர்ச்சை பேச்சு!

Share it if you like it

கொரோனா பெரும் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய பெருமை ஏசுவையே சேரும் என தெலுங்கானா மாநிலத்தின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் கூறியிருக்கும் கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிக்கையை முன்னிட்டு, சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் கேக் வெட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனை முன்னிட்டு, தெலுங்கானாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் கடலா ஸ்ரீனிவாஸ் ராவ் கலந்து கொண்டார். இதில், கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஸ்ரீனிவாஸ் ராவ் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

இந்தியா அல்லது தெலுங்கானாவில் நவீன யுகத்தில் வெற்றியாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமே. கொரோனா பெரும் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய பெருமை ஏசுவையே சேரும் என்று கூறியிருக்கிறார். இவரின், கருத்து நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it