சென்னையில் சோதனை : 2.85 கோடி ரூபாய் பணம் பறிமுதல் !

சென்னையில் சோதனை : 2.85 கோடி ரூபாய் பணம் பறிமுதல் !

Share it if you like it

தகவலின் அடிப்படையில் சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேடியல் சாலையில் பி.எல்.ஆர்.புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி மணல் விற்பனை செய்யும் இடத்தில் இன்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் 65 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பல்லாவரத்தை சேர்ந்த லிங்ஜராஜ் என்பவருக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.

அலுவலகம் மட்டுமன்றி லிங்கராஜ் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பல்லாவரம், பெருமாள் நகர் வீட்டில் நடத்திய அந்த சோதனையில் 2.20 கோடி ரூபாய் என மொத்தம் 2.85 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

திருநீர்மலையில் இவருக்கு சொந்தமான கிரஷரிலும் சோதனை மேற்கொள்ளபட்டது. இவர் அதிமுகவை சேர்ந்தவர் உறுப்பினராக மட்டும் இருப்பதாக தகவல். பறிமுதல் செய்த பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *