திமுக -வுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் தமிமுன் அன்சாரி திமுகவை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.