உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த கிறிஸ்தவரின் உடலை நல்லடக்கம் செய்த ஹிந்து முன்னணி அமைப்பினருக்கு குவியும் பாராட்டுக்கள்.
சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோல்டன் என்ற கிறிஸ்தவர் உடல் நலக்குறைவால் இறந்த செய்தியை அறிந்த இந்துமுன்னணி அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் காவல்துறை அனுமதியுடன் அவரின் உடலை ஓட்டேரி இடுகாட்டில் நல்லடக்கம் செய்து வைத்தனர். மேலும் அவரின் மகளை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஜாதி, மதம் என்று எதனையும் பார்க்காமல், சமயத்தில் உதவி செய்த இந்து முன்னணி அமைப்பினருக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், தெரிவித்து வருகின்றனர்.