தமிழ் படிக்க தெரியாத நா.த.க வேட்பாளர் – சந்தி சிரிக்கும் நிலையில் சீமான் கட்சி !

தமிழ் படிக்க தெரியாத நா.த.க வேட்பாளர் – சந்தி சிரிக்கும் நிலையில் சீமான் கட்சி !

Share it if you like it

விருதுநகர் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் திருமதி.ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக முடிவு செய்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் உறுதிமொழியை வாசிக்க சொல்லி நா.த.க வேட்பாளரை தேர்தல் அலுவலரான ஜெயசீலன் கூறினார். படிக்கச் தெரியாமல் திருதிருவென முழித்த நா.த.க வேட்பாளர் தனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று கூறியுள்ளார். அதன் பின் தேர்தல் அலுவலரே உறுதிமொழியை படிக்க வேட்பாளர் திரும்ப சொன்னார். இதற்கு நாம் தமிழர் கட்சினர், எங்கள் வேட்பாளர் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்க தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

நாளை இவர் ஜெயித்து அமைச்சராகி விட்டால் மக்கள் கொடுக்கும் மனுக்களை எப்படி படித்து மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார். தமிழ் படிக்க மட்டும் தெரியாதா இல்லை பேசவும் தெரியாதா என்பது தெரியவில்லை. இவரை எல்லாம் வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களின் நிலை அவ்வளவுதான். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் இணையதளவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

https://x.com/Namo3Namo/status/1772491130908655914?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *