அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் 42 சவீதம் இருந்தது தற்போது 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அரசின் முடிவால் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதனால் பயன்பெறுவார்கள்.
துணை ராணுவப் படைகளில் பணிபுரிபவர்களுக்கு உரிய தீபாவளி போனஸ் தொகை விடுவிக்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.