திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் 200-வது வருவிக்கவுற்ற பெருவிழா அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த பெருவிழாவில் வள்ளல் பெருமானார் அருளிய சுத்த சன்மார்க்க நெறிகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான நூல் “The Luminary of Compassion Sri Ramalina Swamigal” மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வெளியிடப்பட்டது. இதில் பாஜக அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.