ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி நகரில் பாரத ராணுவ தளத்தின் மீது கடந்த 2016- ம் ஆண்டு 14-ம் தேதிபாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணமடைந்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்த செயல்களை ஊக்குவிக்கும் நாடுகளில் முகாம் அமைத்து தீவிரவாதிகள் செய்படுவேதே இது போன்ற தாக்குதல்களுக்கு காரணம் என பாரதம் பலமுறை எச்சரித்த வந்த நிலையில் அந்த முகாம்களை அழிக்க சர்ஜிக்கல் தாக்குதல் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தியது. 2016 – ஆம் ஆண்டில் இதே நாளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் சீறிப்பாய்ந்த பாரதத்தின் அதி நவீன போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது மிக துல்லியமாக குண்டுகளை வீசி தகர்த்தன. இந்த தாக்குதல் பாரத விமானப்படையின் ஆற்றலை உலக நாடுகளுக்கு உணர்த்தியது.