தனியார் பேருந்து நடத்துனரை தாக்கி பணப்பையை பறிக்க முயன்ற இளைஞர்கள்  !

தனியார் பேருந்து நடத்துனரை தாக்கி பணப்பையை பறிக்க முயன்ற இளைஞர்கள் !

Share it if you like it

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து ஒன்றில் பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தனியாருக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கிய நிகழ்வானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் சத்திரத்தில் இருந்து துவாக்குடி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோவிலில் பெண் பயணி ஒருவர் இறங்க வேண்டும். ஆனால் நடத்துனர் மூக்கையன் விசில் அடிக்க தவறியதால் பேருந்து நிறுத்தாமல் சென்று உள்ளது. நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் பேருந்து சென்று அந்த பெண் பயணியை இறக்கிவிட்டதால், பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து திரும்பியதும், அந்த 5 பேரும் பேருந்தில் ஏறி, பெண் பயணியை வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, நடத்துனரை தாக்கினர். கண்டக்டரை தாக்கிவிட்டு அவரது பணப்பையையும் கொள்ளையர்கள் பறிக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் நடத்துனர் புகார் அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share it if you like it