நிதிப் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளர் அற்புதமான பதில் அளித்த நிதியமைச்சர்..!

நிதிப் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளர் அற்புதமான பதில் அளித்த நிதியமைச்சர்..!

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அம்மா உணவகத்தில் ஆட்கள் குறைக்கப்படுவது குறித்து பெண் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய பொழுது நான் தினமும் அந்தந்த திட்டத்தின் நிதியை பற்றி பார்க்கிற ஆளில்லை என்று கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல், அவர்களை விமர்சனம் செய்வது, அல்லது கடிந்து கொள்வது என தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் மனம் போன போக்கில் தனது எண்ணத்தை இன்று வரை வெளிப்படுத்தி வரும் நபராக இருந்து இருந்து வருவதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். .

அதனை தொடர்ந்து சமீபத்தில் உ.பி-யில் நடைப்பெற்ற GST மீட்டிங்கில் கலந்துக் கொள்ளாமல். வளைகாப்பு நிகழ்ச்சி உள்ளது என்று அவர் அமைச்சர் கூறிய பதில் அந்நாட்களில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

கேள்வி: அம்மா உணவகத்தில் நிதி பற்றாக்குறை??

தமிழக நிதியமைச்சரின் பதில்: நான் தினமும் அந்தந்த திட்டத்தின் நிதியை பற்றி பார்க்கிற ஆளில்லை


Share it if you like it