அன்று சிதம்பரம் நடராஜர்… இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர்: எல்லைமீறும் திராவிட கும்பல்… கொதிக்கும் ஹிந்துக்கள்!

அன்று சிதம்பரம் நடராஜர்… இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர்: எல்லைமீறும் திராவிட கும்பல்… கொதிக்கும் ஹிந்துக்கள்!

Share it if you like it

கடவுள் அரங்கநாதரை அவமானப்படுத்தும் வகையில், திராவிடக் கழகத்தினர் பாடல் இயற்றி பொதுவெளியில் பாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவதையே திராவிடர் கழகத்தினர், திராவிட விடுதலைக் கழகத்தினர், கருப்பர் கூட்டம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க. அரசு முழு ஆதரவு கொடுத்து வருவதோடு, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருந்து வருகிறது. இதனால், மேற்கண்ட அமைப்பினர் ஹிந்து கடவுள்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது திராவிட விடுதலைக் கழகத்தினர் கடவுள் ரெங்கநாதனரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி, பொதுவெளியில் பாடவும் செய்திருக்கிறார்கள்.

“உறக்கத்தில இருக்குறியா ரெங்கநாதா… இல்ல போதை கிறக்கத்தில இருக்குறியா ரெங்கநாதா…” என்று ஆரம்பித்து அரங்கநாதனை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த பாடல் வீடியோ…


Share it if you like it