டாய்லெட் பேப்பர் ’முரசொலி’: அண்ணாமலை காட்டம்!

டாய்லெட் பேப்பர் ’முரசொலி’: அண்ணாமலை காட்டம்!

Share it if you like it

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலியை டாய்லெட் பேப்பர் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்து உள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரபல ஊடகத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியில், 1959-ல் நம்பூதிரி பாத் ஆட்சியை கலைத்தவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று கேரள மாநிலம் கண்ணூர் சென்று சி.பி.ஐ.எம் மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அப்பொழுது, மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். எந்த சரித்திரமும் தெரியாமல் எதுவும் புரியாமல் யாரோ எழுதி கொடுத்ததை முதல்வர் பேசி வருகிறார். இதன்காரணமாக, தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து தலைகுனிவை முதல்வர் ஏற்படுத்தி வருகிறார். இதைபார்த்து, அனைத்து மாநிலங்களும் சிரிக்கின்றன. வெறும் அரசியல் லாபத்திற்காக இதுபோன்று பேசி வருகிறார் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், அவரை இழிவுப்படுத்தியுள்ளது. மாற்று கட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல், பத்திரிக்கை தர்மத்தை மறந்து விட்டு பொறுப்பற்ற முறையில் முரசொலி பதில் அளித்துள்ளது. இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழக்கம் போல தனது அதிரடியான பதிலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழில் தினசரி நாளிதழ் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ’டாய்லெட் பேப்பருக்கு தகுதியான செய்தித் தாள். இது முரசொலி என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட் அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதற்கான எனது வீடியோவையும் நான் பேசியதற்கான ஆதாரத்தையும் தயவுசெய்து பார்க்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it