இந்தியாவின் மீது திடீர் அக்கறை: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

இந்தியாவின் மீது திடீர் அக்கறை: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

Share it if you like it

இந்தியாவின் மீது திடீர் கரிசனம் காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், பட்டியல் சமூக மக்களின் தலைவராக தம்மை காட்டிக் கொண்டு அச்சமுதாயத்தை மக்கள் தி.மு.க ஆட்சியில் பாதிக்கப்படும் பொழுது கண்டும் காணாமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. இதுதவிர, அப்பாவி பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை மூளை சலவை செய்து தவறான வழியை காட்டுகிறார் திருமா என சமூக ஆர்வலர்கள் இன்று வரை இவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் பற்றி தமிழக மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் வெளிச்சம் தேடும் நபராகவும் இருந்து வருகிறார்.

அந்தவகையில், உலகத்தையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்த கொடிய நோய் கொரோனா. இக்கொடிய, நோயின் தாக்குதலுக்கு சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கடும் சங்கடங்களை சந்தித்தன. குறிப்பாக, அந்நாடுகளின் பொருளாதாரம் படுக்குழியில் விழுந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம் இந்நோய் தொற்று இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டன. இதுமட்டுமில்லாது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு வல்லரசு நாடுகளே தங்களது புருவங்களை உயர்த்தியுள்ளன.

இதுதவிர, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்கியவர் மோடி. மேலும், பல ஏழை நாடுகளுக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் தக்க சமயத்தில் உதவி செய்தது இந்தியா. இப்படிப்பட்ட சூழலில் தான், பாரதப் பிரதமருக்கு நற்பெயர் கிடைத்து விட கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தவர் திருமா. இதுதவிர, இந்திய எல்லையில் அத்தூமீறி நடந்து கொண்டு வரும் சீனா ராணுவத்தை கண்டிக்காமல் இந்திய ராணுவம் குறித்து கருத்து தெரிவித்தவர். இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள் வறுத்தெடுத்த காரணத்தினால் தனது ட்விட்டர் பதிவை சத்தமில்லாமல் நீக்கியவர். இப்படியாக, இந்தியாவிற்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் இவர் தான் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைக்குனிவு ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருப்பது நகைச்சுவையின் உச்சம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருமா ட்விட்டர் பதிவு இதோ..

Image
ஒருபக்கம் தடுப்பூசி குறித்து கருத்து மறுபக்கம் உயிர் பயம் காரணமாக கோவிஷூல்டு போட்டுக் கொண்ட திருமா.

Share it if you like it