தமிழக காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்ட தேதியை அறிவித்த திருமா? மெளனம் காக்கும் முதல்வர்..!

தமிழக காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்ட தேதியை அறிவித்த திருமா? மெளனம் காக்கும் முதல்வர்..!

Share it if you like it

மோரூர் பேருந்து நிலையத்தில் விசிக கொடியேற்றத்தில் நிகழ்ந்த சலசலப்பை தொடர்ந்து. அப்பகுதியில் கடும் பதற்றம் உருவாகியது. அதனை தொடர்ந்து கூட்டத்தை கலைக்க தமிழக காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் காவல்துறையின் செயல் பற்றி இவ்வாறு கருத்து பதிவு செய்து உள்ளார்.

மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித்விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 29-09-2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழக காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்றால் அது முதல்வர் ஸ்டாலினையே எதிர்ப்பதற்கு சமம் ஏன்? இன்னும் தமிழக முதல்வர் மெளனம் காக்க வேண்டும் என்று நெட்டடிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it