தோழமை சுட்டுதலை மீண்டும் மறந்த திருமாவளவன் நெட்டிசன்கள் ’பொடி மாஸ்’..!

தோழமை சுட்டுதலை மீண்டும் மறந்த திருமாவளவன் நெட்டிசன்கள் ’பொடி மாஸ்’..!

Share it if you like it

  • தி.மு.க.,வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும். தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி. தமிழக ஊடகங்களையும், பட்டியலின சமூக மக்களையும். மிகவும் இழிவுப்படுத்தி பேசி இருந்ததற்கு. திருமாவளவன் தனது கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, தெரிவிக்காமல் வழக்கம் போல கள்ள மெளனம்..
  • திமுகவின் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன்  தலைமை செயலாளரை சந்தித்து (13-5-2020) மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர்.
  • நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்று கூறியுள்ளார். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களை தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள். மற்ற சாதிக்காரர்களை அப்படி நடத்தமாட்டார்கள், என்ற ஆதிக்க சாதி ஆவணப் பேச்சை கண்டிக்காமல் அதே கள்ள மெளனம்.
  • அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம். நேற்று நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் காலணி அணிந்து கொண்டு சட்டமேதை அம்பேத்கார் அவர்களுக்கு மாலை அணிவித்து இழிவுப்படுத்தி உள்ளார்.
  • பட்டியல் சமூக மக்களின் காவலன் என்று கூறிக்கொள்ளும் திருமாவளவன். ஸ்டாலினை கண்டித்து இதுவரை அறிக்கை வெளியிடாமல் இருப்பது ஏன்? மெத்த படித்த விக்ரமன், வன்னியரசு, மற்றும் கல் தூக்கிய சொர்ணாக்கா, போன்றவர்கள் திருமாவிற்கு தக்க அறிவுரையை வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காலணிகள் அணியாமல் தந்தைக்கு மரியாதை செலுத்திய மு க ஸ்டாலின்
காலணிகளை அணிந்து சட்டமேதை பாரத் ரத்னா DR அம்பேத்கர் சிலைக்கு மாலையிடும் மு க ஸ்டாலின்

Share it if you like it