நான் தன்மானமிக்க தலைவன்… என்னை யாரும் விலை பேச முடியாது – திருமா ஆவேசம்!

நான் தன்மானமிக்க தலைவன்… என்னை யாரும் விலை பேச முடியாது – திருமா ஆவேசம்!

Share it if you like it

என்னை யாரும் விலை பேச முடியாது. தன்மான மிக்க தலைவன் என்ற ரிதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அடங்கமறு, அத்து மீறு, திமிரி எழு, என்று உணர்ச்சி பொங்க பேச கூடியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், மேடைகளில் ஆவேசமாக பேசினாலும் அதன் தோழமை கட்சிகள் வி.சி.க-வை ஒரு பொருட்டாக இன்று வரை மதிப்பதில்லை என்பதை அனைவரும் அறிந்த உண்மை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என தமிழக காவல்துறைக்கு வி.சி.க. மூத்த தலைவர் வன்னியரசு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் திருமாவளவனை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தாம் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் இவ்வாறு பேசினார் ;

என்னை விலை பேச இந்த உலகத்தில் எவனும் பிறக்கவில்லை. என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எந்த கொம்பனுக்கும் அந்த சக்தி கிடையாது. நீ விலை பேச கூடிய அளவிற்கு நான் சாதாரண ஆள் இல்லை. என்னை இன்னும் நிறைய பேர் புரிந்து கொள்ளவில்லை. நான் 32 ஆண்டுகள் பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை, யாரேனும் ஊழல் செய்தவன் என்று கூற முடியுமா? என ஆவேசமாக அக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இதனிடையே, தி.மு.க. மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு, இதுவரை ரூ. 2000 கோடி சொத்து சேர்த்துள்ளார் திருமாவளவன் என்று ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பகீர் தகவலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it