சின்ன கலைவாணர் மரணத்திலும் அரசியல் செய்த மனசாட்சி இல்லாத திருமாவளவன்..!

சின்ன கலைவாணர் மரணத்திலும் அரசியல் செய்த மனசாட்சி இல்லாத திருமாவளவன்..!

Share it if you like it

மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. பல வல்லரசு நாடுகள், இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்தை, வழங்குமாறு வரிசையில் நிற்கும் பொழுது. வி.சி.க தலைவர் திருமாவளவன். கொரோனா தடுப்பு மருந்து குறித்து மிக கீழ்த்தரமான அரசியல் செய்தார் திருமா.

மத்திய, மாநில அரசுகளை, கடுமையாக விமர்சனம் செய்து விட்டு. முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தடுப்பூசியையும் போட்டு கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

வாழும் நாட்டிற்கும், சமூகத்திற்கும், உண்மையாகவும், நேர்மையாகவும், வாழ்ந்த நடிகர் விவேக். தமிழக மக்களிடம் உள்ள அச்ச உணர்வை நீக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக. கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டார்.

விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு, காரணம் தடுப்பூசியே காரணம் என்று சில சில்லறை போராளிகள், அறம் மறந்த ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், கழக நெறியாளர்கள், என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய திருமாவளவன். துளியும் மனசாட்சி இல்லாமல். ஒரு மாபெரும் கலைஞரின் இறப்பிலும், தனது கீழ்த்தரமான அரசியல் புத்தியை காட்டியுள்ளதாக, நெட்டிசன்கள் உட்பட பலரும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

Image
முதல் தடுப்பூசி போட்டு கொண்ட பொழுது


Share it if you like it