சபரிமலை கோவிலுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த திருமா!

சபரிமலை கோவிலுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த திருமா!

Share it if you like it

சபரிமலை கோவிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிபாரிசு கடிதம் கொடுத்து இருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசுவதையே தனது முழுநேர தொழிலாக கொண்டவர். இவருக்கு, பின்னால், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமியர்கள் மற்றும் பிரிவினை சக்திகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

ஜாதி, மதம், இனம், மொழி, என்று வேற்றுமை பாராமல் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட திருமாவளவன்தான் தொடர்ந்து ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு தனது ஆதரவாளர்கள் 4 பேர் வருகின்றனர். இக்கடிதத்தை, கொண்டு வரும் நபர்களுக்கு வி.ஜ.பி. பாஸ் வழங்கி மேற்கொண்டு உதவிகளை செய்யுமாறு கேட்டுகொள்கிறேன் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it