ஈயம் பூசன மாதிரியும் இருக்கணும் பூசா மாதிரியே இருக்கணும் என்பது போல் ஆளும் கட்சிக்கு கண்டனம் தெரிவித்த திருமுருகன் காந்தி..!

ஈயம் பூசன மாதிரியும் இருக்கணும் பூசா மாதிரியே இருக்கணும் என்பது போல் ஆளும் கட்சிக்கு கண்டனம் தெரிவித்த திருமுருகன் காந்தி..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து ஏதேனும் ஒரு பொய்யை மக்களிடம் பரப்பி அதன் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி கொள்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் திருமுருகன் காந்தி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அண்மையில் சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் சமூக மக்களின் வீடுகளை இடித்து தி.மு.க அரசு அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டிய பா.ரஞ்சித், திருமாவளவன், போன்றவர்கள் ஆளும் கட்சிக்கு முட்டு கொடுக்கும் விதமாக மென்மையான எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். அந்த வரிசையில் திருமுருகன் காந்தியும் ஈயம் பூசன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது போல் தி.மு.க அரசிற்கு தனது கண்டனத்தை திருமுருகன் காந்தி தெரிவித்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.       f


Share it if you like it