தி.மு.க. ஆட்சியில் அவலம்… திருமுருகன் காந்தி எங்கே?… ராஜவேல் நாகராஜன் சரமாரி கேள்வி!!

தி.மு.க. ஆட்சியில் அவலம்… திருமுருகன் காந்தி எங்கே?… ராஜவேல் நாகராஜன் சரமாரி கேள்வி!!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் நிகழும் அவலங்களை சுட்டிக்காட்டாமல், திருமுருகன் காந்தி எங்கே? போனார் என பிரபல யூடியூபர் ராஜவேல் நாகராஜன் கேள்வி எழுப்பிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

மே 17 இயக்கத்தின் நிறுவனராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மிக கடுமையாக எதிர்த்தவர். மேலும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தவர். அந்த வகையில், தி.மு.க.வின் ஊதுகுழலாக இவர் செயல்பட்டார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இந்த ஒரு வருடத்தில், சட்டம் ஒழுங்கு மோசமாகவும், கொலை, கொள்ளை என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர, எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலையம் என மக்கள் விரும்பாத திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த திருமுருகன் காந்தி, விடியல் ஆட்சியில் நிகழும் அவலங்கள் குறித்து ஏன்? பேசவில்லை என ராஜவேல் நாகராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது, இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it