திருமாவை போன்று டைம்ஸ் நவ் நெறியாளரிடம் வாங்கி கட்டிக் கொண்ட விக்ரமன்!

திருமாவை போன்று டைம்ஸ் நவ் நெறியாளரிடம் வாங்கி கட்டிக் கொண்ட விக்ரமன்!

Share it if you like it

எதுவும் தெரியாமல் பிரபல ஆங்கில ஊடக நெறியாளிடம் வி.சி.க செய்தி தொடர்பாளர் விக்ரமன் வாங்கிக் கட்டிக் கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் மனு ஸ்ம்ருதி தொடர்பாக ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் திருமாவளவன், குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். நடைமுறையில் இல்லாத மனு ஸ்மிருதியை குறித்து நீங்கள் இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்னவென்று நெறியாளர் பத்மஜா ஜோஷி திருமாவிடம் கேள்வி ஒன்றினை எழுப்பினார். இதில், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி அரசியல் செய்கிறது. மனு ஸ்மிருதி என்று மழுப்பலான முறையில் பதில் அளித்து அக்கட்சியின் தலைவர் அசிங்கப்பட்ட சம்பவம் அந்நாட்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

அந்தவகையில், வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளரும், ஆண் நபர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான விக்ரமன் அதே ’டைம்ஸ் நவ்’ ஊடக நெறியாளர் பத்மஜா ஜோஷி செஞ்சட்டை பேரணியில் ஹிந்து கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பப்பட்டது தொடர்பாக கேள்வி ஒன்றினை எழுப்பினார். ஒன்றும் தெரியாத விக்ரமன் வி.சி.க தலைவர் திருமா போன்று வழக்கம் போல உளறி கொட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஆறு மாதம் படித்தால் போதும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் சுலபமாக ஆகிவிடலாம் என அண்ணாமலைக்கு பாடம் நடத்திய திருமாவளவன் தனது செய்தி தொடர்பாளருக்கு எப்படி பேச வேண்டும் என்பதை முதலில் பாடம் நடத்தி விட்டு அப்புறம் பா.ஜ.க தலைவருக்கு ஆலோசனை கூறலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் தலைவராக இல்லாமல் தவறான பாதையை காட்டும் தலைவராக இன்று வரை திருமாவளவன் இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it