கசமுசா பாதிரியார் நடத்தி வந்த காப்பகத்தில் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

கசமுசா பாதிரியார் நடத்தி வந்த காப்பகத்தில் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, பணகுடி – ரோஸ்மியாபுரத்தில் “ஹெர்மைன்ஸ்” என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான ஆதரவற்றோர் இல்லத்தை ‘பாதிரியார்’ “ஜோசப் ஈஸிதோர் ” என்பவர் நடத்தி வருகிறார். மேற்படி பாதிரியார் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகள் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களிடம் காம சல்லாபத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் பாதிரியார்.
இந்நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரிந்து வரும் 40 வயது மதிக்கதக்க பெண்மணியிடம் கடந்த 25-01-2021 -ம் தேதியன்று நிர்வாணமான முறையில் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அந்த காப்பகத்தில் சமையல்காரராக பணி புரிந்து வரும் 60 வயது மதிக்கதக்க ஆதரவற்ற பெண்மணி கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதனை அடுத்து பாதிரியாரும், உல்லாசத்தில் ஈடுபட்ட பெண்மணியும் சேர்ந்து சமையல்கார பெண்மணியிடம் இச்சம்பவத்தை வெளியில் சொல்ல கூடாது என்று கூறி அப்பெண்ணை தனியறையில் அடைத்து வைத்து, சித்ரவதை செய்து கொடுமைபடுத்தியுள்ளனர். மேற்படி பாதிரியாரும், சல்லாபத்தில் ஈடுபட்ட பெண்மணியும் தாக்கியதில் அப்பெண் படுகாயம் அடைந்து உள்ளார்.

தாக்குதலுக்குள்ளான அப்பெண் தக்க சமயம் பார்த்து காப்பகத்திலிருந்து தப்பித்து ராதாபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்த தகவல் பணகுடி காவல் துறையினருக்கு தெரிய வரவே மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பெண்மணி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் காப்பகம் சென்று அங்கு சோதனை செய்ததில் காப்பகத்தின் உள்ளே மது பாட்டில்கள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாதிரியார் என்ற போர்வையை போர்த்தி கொண்டு காம களியாட்டங்களில் ஈடுபட்டது மட்டும்மல்லாமல் , பெண்கள், குழந்தைகள், இருக்கும் காப்பகத்தில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்..


Share it if you like it