இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை ஆந்திர மாநில போலிசார் கைது செய்து உள்ளனர்.
சிறுவர்கள், சிறுமிகள், இளம் பெண்கள், என அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் இச்சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இத்துயர நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சேக் முகமது ரபி என்பவன், இன்ஸ்டா கிராமில் தன்னிடம் நட்பில் இருந்த இளம் பெண் ஒருவரிடம் பணம், நகை, பறித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Facebook -ல் அறிமுகமான நபரிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை சமீபத்தில் இழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.