சிறுமியிடம் அத்துமீறல்: கிறிஸ்தவ மதபோதகர் கைது!

சிறுமியிடம் அத்துமீறல்: கிறிஸ்தவ மதபோதகர் கைது!

Share it if you like it

14 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்கார அத்துமீறலில் ஈடுபட்ட கிறிஸ்தவ மதபோதகர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய மதரஸாவில் படிக்கும் சிறுமிகளும், சிறுவர்களும் மதரஸா நிர்வாகிகளால் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு உள்ளாகிறார்கள். அதேபோல, கிறிஸ்தவ மதபோதகர்களும் சர்ச்சுக்கு வரும் சிறுமிகள், பெண்களிடம் பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. இது தற்போது தமிழ்நாட்டிலும் அதிகளவில் நடந்து வருவதுதான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் மதபோதகர் ஒருவர், சர்ச் விடுதியில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், வாரம்தோறும் வீரபாண்டியிலுள்ள சர்ச்சுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சூழலில் ஊத்துக்குளி அருகே உள்ள கூனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதபோதகர் ஆண்ட்ரூஸ், அச்சிறுமியின் குடும்பத்துக்கு அறிமுகமாகி இருக்கிறார். அக்குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதைக் கண்ட ஆண்ட்ரூஸ், இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர், அக்குடும்பத்தினரிம் நெருங்கிப் பழகி வந்தவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அக்குடும்பத்தினருக்கு உதவி செய்வது போல நடித்து, அச்சிறுமியையும், அவரது தம்பியையும், கூனம்பட்டியில் தான் நடத்திவரும் ஏழை எளிய மாணவர்களுக்கான விடுதியில் தங்கி படிக்க வைத்திருக்கிறார்.

சில மாதங்கள் கடந்த நிலையில், மதபோதகர் ஆண்ட்ரூஸ், அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும், இதை வெளியில் சொன்னால், விடுதியில் இருந்து விரட்டி விட்டுவிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால், அச்சிறுமி பயந்துகொண்டு யாரிடமும் சொல்லவில்லை. அதேசமயம், சிறுமியிடம் ஆண்ட்ரூஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது, அவரது மனைவிக்குத் தெரிந்து விட்டது. இந்த சூழலில், கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வந்தது. எனவே, மேற்கண்ட சிறுமியும், அவரது தம்பியும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், இருவரும் மீண்டும் விடுதிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

ஆனால், இருவரையும் மீண்டும் விடுதியில் சேர்க்க அவரது மனைவியும், நிர்வாகத்தினரும் மறுத்துவிட்டனர். அச்சிறுமியின் குடும்பத்தினர் காரணம் கேட்டதற்கு, இருவரும் சொல்பேச்சு கேட்பதில்லை என்று சப்பை காரணத்தை கூறியிருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து அச்சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான், மேற்கண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. விடுதியுடன் கூடிய அந்த மதபோதனை கூடத்தில், மதபோதகர் ஆண்ட்ரூஸ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், ஆண்ட்ரூஸ் அத்துமீறியது உறுதியானது. இதைத் தொடர்ந்து, போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆண்ட்ரூஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளிக்கு படிக்க வந்த சிறுமியிடம், மதபோதகர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it