போடா அறுத்துப்புடுவேன்… ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திருப்பூர் போலீஸ்!

போடா அறுத்துப்புடுவேன்… ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திருப்பூர் போலீஸ்!

Share it if you like it

திருப்பூரில் சாமி கும்பிடச் சென்ற ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை, போலீஸ்காரர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு, அறுத்துப்புடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறை தி.மு.க.வின் ஏவல்துறையாக மாறி இருக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதை பல முறை சொல்லி இருக்கிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பற்றியோ, ஈரோடு வெங்கட ராமசாமி பற்றியோ, அண்ணாதுரை பற்றியோ யாராவது கருத்துக் கூறினாலோ, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ, அவர்கள் மீது தி.மு.க.வின் ஏவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்வது வழக்கமாக இருக்கிறது. அதேசமயம், ஹிந்து தெய்வங்களை பற்றி அவதூறாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் வீடியோ வெளியிட்டாலும் கண்டுகொள்ளாது தி.மு.க. ஏவல் போலீஸ்.

இந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர், அறுத்துப்புடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். திருப்பூர் தாராபுரம் ரோட்டிலுள்ள கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பூர் காங்கேயம் ரோட்டிலுள்ள பகுதியில் வசிக்கும் சிதம்பரம் மகன் மனோஜ்குமார், தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். இவர், அப்பகுதியின் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியாவார். இந்த சூழலில், கோயிலுக்குச் சென்ற மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களை, தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் நாகேந்திரன் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

பின்னர், இரவு நேரத்தில் என்னடா உங்களுக்கு இங்கு வேலை. சாமி கும்பிடுற வெளக்கமாத்த பாத்தா தெரியல. ராத்திரி 11 மணிக்கு பொண்டாட்டி புள்ளையோட வீட்டுல இல்லாம இங்க என்னடா புடுங்குற வேலை என்று கேட்டுவிட்டு, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். மேலும், மனோஜ்குமாரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு விட்டு, மரியாதையா போயிடு, இல்ல அறுத்துப் போட்டுடவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதையடுத்து, வீட்டிற்குச் சென்ற மனோஜ்குமார் இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தி.மு.க. அரசின் ஏவல் துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it