இராவணனை எதிர்த்து போரிட்ட, ஸ்ரீ ராமரை போல  நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்- ஜனாதிபதி திரௌபதி முர்மு !

இராவணனை எதிர்த்து போரிட்ட, ஸ்ரீ ராமரை போல நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்- ஜனாதிபதி திரௌபதி முர்மு !

Share it if you like it

தசரா விழாவையொட்டி புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நேற்று பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு பேசியதாவது :-

இன்றைய காலகட்டத்தில், இராவணனைபோலவே ஊழல், சமத்துவமின்மை, கல்வியறிவின்மை. மற்றும் பயங்கரவாதம் போன்ற புதிய சவால்கள் நம் முன் நிற்கின்றன. ராவணனை எதிர்த்து போரிட சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஆதரவை பெற்ற ஸ்ரீராமரை போல இன்றைய நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இன்றைய இராவணனை எதிர்த்து போராட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பேசினார்.


Share it if you like it