எதிரியை பழிவாங்க வயிற்றைக் கிழித்து பெற்ற மகள் கொடூர கொலை: தந்தை அனீஸ் உட்பட 5 பேர் கைது!

எதிரியை பழிவாங்க வயிற்றைக் கிழித்து பெற்ற மகள் கொடூர கொலை: தந்தை அனீஸ் உட்பட 5 பேர் கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதிரியை பழிவாங்குவதற்காக பெற்ற மகளையே வயிற்றைக் கிழித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை அனீஸ், தாத்தா ஷெஹ்சாதா, மாமாக்கள் சலீம், நசீம், ஷதாப் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் அமரியா காவல் நிலையத்திற்குட்பட்ட மாதோபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஸ் அகமது. இவரது மகள் அனம். 9 வயதான இவர், 3-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி திடீரென சிறுமி அனமை காணவில்லை. பின்னர், அருகிலுள்ள கோதுமை வயலில் முகத்தில் பலத்த காயங்களுடனும், வயிறு கிழிக்கப்பட்டு உள்ளுறுப்புகள் வெளியே வந்த நிலையிலும், அச்சிறுமி உயிருக்குப் போராடிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும், அச்சிறுமியை காப்பாற்ற முயற்சிக்காமல் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் தந்தை அனீஸ் அகமது போலீஸாரிடம், அருகிலுள்ள சரிந்தாபட்டி கிராமத்தில் நடந்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனம் தனது மாமா ஷதாப் அகமதுவுடன் சென்றதாகவும், திடீரென இரவு மர்மமான முறையில் காணாமல் போனதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அனமை குடும்பத்தினர் தேடிவந்த நிலையில், சனிக்கிழமை காலையில் கோதுமை வயலின் நடுவே கொடூரமான நிலையில் கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறார். பின்னர், அச்சிறுமியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அப்போது தாக்கியவரின் பெயரை சொல்ல முயன்றதாகவும், ஆனால், முடியாமல் அச்சிறுமி இறந்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீஸார், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷகில் வைஸ்தவா என்பவருக்கும், அனீஸ் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதை அறிந்து, சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர். ஆனால், இதன் பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சிறுமியின் மாமா ஷதாப் அகமது, கடந்த 2018-ம் ஆண்டு ஷகீலின் சகோதரியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து ஷகில் கொடுத்த புகாரின் பேரில் ஷதாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்போதுவரை நடந்து வருகிறது. ஆகவே, ஷகிலை பழிவாங்குவதற்காக, பெற்ற மகளையே கொல்லத் துணிந்திருக்கிறார் அனீஸ்.

அதாவது, அனமை கொலை செய்து, அப்பழியைத் தூக்கி ஷகில் மீது போட்டு சிறைக்கு அனுப்ப அனீஸ், ஷதாப், அவரது சகோதரர்கள் நசீம், சலீம் மற்றும் தாத்தா ஷெஹ்சாதா ஆகியோர் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, பக்கத்து ஊரான சரிந்தாபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க அனமை அழைத்துச் சென்றிருக்கிறார் ஷதாப். பின்னர், அங்கிருந்து அச்சிறுமியை ஒரு பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, அனீஸ், ஷெஹ்சாதா, சலீம், நசீம் ஆகியோர் தயாராக இருந்திருக்கிறார்கள். பின்னர், சிறுமிக்கு மயக்க மாத்திரை கொடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக மயக்கமடைந்த சிறுமியை, செங்கல்லால் முகத்தில் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள். பின்னர், கத்தியால் சிறுமியின் வயிற்றைக் கிழித்து உள்ளுறுப்புகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். இதன் பிறகு, சிறுமியை அருகிலுள்ள கோதுமை வயலில் தூக்கி வீசிவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தை குடும்ப பெண்களிடம் மறைத்தவர்கள், சிறுமியை தேடுவதுபோல நடித்திருக்கிறார்கள். ஆனால், போலீஸார் ஊர்மக்களிடம் விசாரித்தபோது, சிறுமியின் தந்தை அனீஸ், மாமா ஷதாப் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு அச்சிறுமியை அழைத்துச் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் அனீஸ் உள்ளிட்டோரிடம் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான், சிறுமியைக் கொலை செய்ததை 5 பேரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சனிக்கிழமை காலை சென்று பார்த்தபோது சிறுமி உயிருடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், வீடியோ எடுத்து ஷகில் பேரை சொல்லும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், அதிர ரத்தப்போக்கு காரணமாக பேசக்கூட முடியாத நிலையில் இருந்த சிறுமியால் சொல்ல முடியவில்லை. சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். எனவே, அந்த வீடியோ வெளியிட்டு வழக்கை திசைதிருப்ப முயற்சித்திருக்கிறார். இவை அனைத்தும் அறிந்த போலீஸார், 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

மனச்சாட்சியே இல்லாத மிருகங்கள்!


Share it if you like it