மசூதியில் சிறுமி பலாத்காரம்: மௌலானா அப்துல் காதர் கைது!

மசூதியில் சிறுமி பலாத்காரம்: மௌலானா அப்துல் காதர் கைது!

Share it if you like it

உ.பி.யில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மௌலானா அப்துல் காதர் இமாம் என்கிற இமாமை போலீஸார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் மதரஸாக்களில் பயிலும் சிறுவர், சிறுமியர், அங்கு பணிபுரியும் மௌலானாக்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக ஏராளமான மதரஸாக்களில் பணிபுரியும் மௌலானாக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற குற்றங்கள் சற்று அதிகமாகவே நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, மதரஸாவில் படித்த 11 வயதான மைனர் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மௌலானா ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது உ.பி.யில் புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் அம்ரோஹாவில் ஒரு மசூதி செயல்பட்டு வருகிறது. இங்கு, சம்பல் மாவட்டம் அஸ்மௌலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரச்சேட்டா கிராமத்தில் வசிக்கும் மௌலானா அப்துல் காதர் இமாம் என்பவர் இமாமாக பணிபுரிந்து வந்தார். இவர்தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது, திடாலி கோட்வாலி பகுதியிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவரின் 15-வயது மகள், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார், இச்சிறுமி, இஸ்லாமிய மத படிப்பு படிப்பதற்காக, மேற்கண்ட மசூதிக்கு செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

சம்பவத்தன்று, வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிய மௌலானா அப்துல் காதர் இமாம், அறையை கூட்டிப்பெருக்க வேண்டும் என்று சொல்லி, அந்த சிறுமியை மட்டும் இருக்க வைத்திருக்கிறார். பின்னர், தனது அறைக்கு அழைத்துச் சென்ற மௌலானா, அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால், அச்சிறுமியும் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அதன் பிறகு அச்சிறுமி மசூதிக்கு படிக்கச் செல்வதை நிறுத்தி விட்டார்.

இதனால் சந்தேகமடைந்த அச்சிறுமியின் தந்தை, என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார். அப்போதுதான், நடந்த சம்பவத்தை அச்சிறுமி விவரித்திருக்கிறார். இதையடுத்து, டிரக் டிரைவரான அவரது தந்தை மகளுடன் கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று மௌலானா அப்துல் காதர் இமாம் மீது புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இமாமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.


Share it if you like it