பகீர் கிளப்பும் வைகோவின் மகன் – “நான் நக்சல் ஆக ஆசைப்பட்டேன்”

பகீர் கிளப்பும் வைகோவின் மகன் – “நான் நக்சல் ஆக ஆசைப்பட்டேன்”

Share it if you like it

விருதுநகர், கிருஷ்னாபுரத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற திராவிட இயக்க பயற்சிப்பாசறை கூட்டத்தில் பேசிய மதிமுக தலைவர் வைகோவின் மகன் துறை வையாபுரி, தனது 35 வயதில் தமிழகமெங்கும் லஞ்சம் தலைவிரித்து ஆடியதாகவும் எனவே தனது மனைவி, குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தான் ஒரு நக்சலைக திட்டமிட்டதாகவும் பேசியுள்ளார்.

லஞ்சத்தை ஒழிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் பொழுது நக்சல் ஆவது தான் அதற்கு தீர்வு என்பதுபோல் தவறான உதாரணத்தை கட்சியினருக்கு காட்டும் இவரின் பேச்சால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் இவரது 35 வயதில் தமிழகமெங்கும் லஞ்சம் தலைவிரித்து ஆடியது என்றால், அப்போது திமுக அதான் ஆட்சியில் இருந்தது எனவே மறைமுகமாக திமுகவை குற்றம் சுமத்துகிறாரோ என்று கூட்டணியில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.


Share it if you like it