Me too புகழை வெளுத்து வாங்கிய ஸ்ரீனிவாசன்!

Me too புகழை வெளுத்து வாங்கிய ஸ்ரீனிவாசன்!

Share it if you like it

பிரபல திரைப்பட பாடலாசிரிர் வைரமுத்து மற்றும் திருமாவை பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ராம ஸ்ரீனிவாசன் வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமாக இருப்பவர் வைரமுத்து. இவர், பெண்கள் சார்ந்த விஷயங்களில் அப்படிப்பட்டவர் என்று பலர் கூறி வருகின்றனர். இதனிடையே, தனக்கு மட்டுமின்றி 9 அப்பாவி பெண்களும் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதனை எதிர்த்து, கடுமையாக போராடிய எனக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல இன்னல்கள் கொடுக்கப்பட்டது என்று பிரபல பின்னணி பாடகி சின்மயி வைரமுத்துவின் உண்மையான சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருந்தார்.

ஆளும் கட்சியின் துணையுடன், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் தப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனிடையே, கடந்த 2021 – ஆம் ஆண்டு இவர் எழுதிய என் காதலே எனும் பாடல் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் இச்சையை தூண்டும் வகையில் அந்த பாடல் அமைந்து இருந்தது. வைரமுத்து, மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் புகார் ஒன்றை அளித்திருந்தது. அதன், மீது இதுவரை என்ன? நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், தி.மு.க. ஆதரவாளர் வைரமுத்து மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவை வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளியில், அவர் கூறியதாவது ;

ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த விடாமல் தடை செய்வதற்கு, திருமாவளவன் மாத்திரமல்ல அவரது, தாத்தாவே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சினிமாவில், பாட்டு எழுதும் பாடலாசிரியர் தான் வைரமுத்து அவரை கவிஞர் என்று சொல்வதையே நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டை இஸ்லாமியர்கள் ஆண்ட போது உருது மொழி திணிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆங்கிலம் திணிக்கப்பட்டது. ஆனால், எந்த மொழியும் இங்கு திணிக்கப்படவில்லை என்று எப்படி? வைரமுத்துவால் பொய் சொல்ல முடிகிறது.

வெள்ளையன் காலை கழுவ வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் எது வேண்டுமானாலும் சொல்ல கூடாது. புலியை தொட்டாலும் மொழியை தொடாதீர்கள் என்று சொல்கிறார். எதை தொட வேண்டும் எதை தொட கூடாது என்பது வைரமுத்துவிற்கு மட்டுமே நன்கு தெரியும். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it