அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம்: சூர்யா, விஜய்க்கு ரசிகர் சவுக்கடி!

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம்: சூர்யா, விஜய்க்கு ரசிகர் சவுக்கடி!

Share it if you like it

‘விவசாயிகளை பத்தி பேசுவாங்க. ஆனா, விவசாயிகளுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்க. அவங்களை நம்பாதீங்க’ என்று நடிகர்கள் சூர்யா, விஜய் உள்ளிட்டோரை குத்திக்கட்டி, அஜித் ரசிகர் ஒருவர் சவுக்கடி கொடுத்திருக்கிறார். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகிறது.

நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் இன்று (பிப்.24-ம் தேதி) ரிலீஸானது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த அஜித் ரசிகர்களிடம், படம் எப்படி இருக்கிறது என்று மீடியாக்களின் செய்தியாளர்கள் கேட்டனர். அவ்வளவுதான், பொங்கி எழுந்து விட்டார் அந்த ரசிகர். நடிகர்கள் சூர்யா, விஜய் உள்ளிட்டோருக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இருந்தது அவரது பேச்சு. அவர் பேசுகையில், “சில நடிகர்கள் படத்தில் விவசாயிகளை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் விவசாயிகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள். எங்கே, விவசாயிகளை பற்றி பேசும் நடிகர்கள், கிராமங்களை தத்தெடுங்கள் பார்ப்போம். உங்கள் காலில் நான் விழுகிறேன்.

அதேபோல, 100 கோடி, 120 கோடி சம்பளம் வாங்குவார்கள். ஆணால், தாங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு வரிகூட கட்டமாட்டர்கள். பண்டிகை நாட்களில் படத்தை விடுவதை விட்டுவிட்டு, இதுபோன்ற வார நாட்களில், வேலை நாட்களில் படத்தை வெளியிடுவதுதான் உண்மையான ஹீரோவுக்கு அழகு. மேலும், கூன் விழுந்த உடம்பை வைத்துக் கொண்டு காரில் தொங்கிக் கொண்டு போக வேண்டாம். படத்தில் கார், பைக் ரேஸ் ஓட்டுவதுபோல சில நடிகர்கள் பில்டப் கொடுப்பார்கள். ஆனால், உண்மையாகவே படத்தில் கார், பைக் ரேஸ் ஓட்டுவதுதான் ரியல் ஹீரோ. ஆகவே, அரசியல் பேசுவது, விவசாயிகளை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகிறது.


Share it if you like it