இந்த கட்சியே ரவுடி கட்சிதான்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பாய்ச்சல்!

இந்த கட்சியே ரவுடி கட்சிதான்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பாய்ச்சல்!

Share it if you like it

தி.மு.க. ஒரு ரவுடி கட்சி என பா.ஜ.க. மூத்த தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை, குறிச்சி பொங்காளியம்மன் கோவிலில், ‘சிறுதுளி’ அமைப்பு சார்பில் அம்மனுக்கு நன்றி கூறும் பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இதையடுத்து, பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது ;

கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகேயுள்ள மாவட்டங்களும், நொய்யல் நதியால் காலம், காலமாக பயனடைந்து வருகின்றன. இன்று நொய்யலாறு கழிவுநீர் அதிகமாக கலந்து வழியெல்லாம் மாசடைந்து, நிரம்பியுள்ள அனைத்து குளங்களும் மாசடைந்துள்ளன. 

நொய்யல் பாதுகாப்பிற்காக முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, சட்டசபையில் விபரம் கேட்பதுடன், பணியை தீவிரப்படுத்த குரல் கொடுப்பேன்.

தி.மு.க., என்றாலே ரவுடிகள் கட்சி தான். அமைச்சர் நாசரின் செயலில் ஆச்சரியமில்லை. மக்கள் ஓட்டு போட்டு அமைச்சரானாலும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாட்டை, மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என கூறியிருக்கிறார்.


Share it if you like it