யார் தேசத்துரோகி திருமா? குருமூர்த்தியா? மிஸ்டர் வன்னியரசு!

யார் தேசத்துரோகி திருமா? குருமூர்த்தியா? மிஸ்டர் வன்னியரசு!

Share it if you like it

இந்திய ராணுவ வீரரை தேசத்துரோகி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வன்னியரசு தெரிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு. இவர், அக்கட்சியின் மிக மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவர். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை திருமாவளவன் போன்று மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ய கூடியவர். இதுதவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழித்தும் பழித்தும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர். இதனிடையே, சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, “தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என்று தெரிவித்து இருந்தார்.

வி.சி.க. தலைவரின் அருவருக்கத்தக்க கருத்து பொதுமக்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, ஆபாச பேச்சாளர் திருமாவின் கருத்தை கண்டித்து பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த குருமூர்த்தி மேகாலயாவில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வருகிறார். இவர், திருமாவின் கருத்தை கண்டிக்கும் விதமாக, காணொளி ஒன்றினை அண்மையில் வெளியிட்டு இருந்தார். அக்காணொளியில் அவர் கூறியதாவது;

தமிழகத்தில், தனியா நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? உன்னால், ஒரு வார்ட்டினை சொந்தமாக மாற்ற முடியுமா? ஒரு நாடு மாதிரி தமிழகத்தை சொந்தமாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். தனி தமிழ்நாடு வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதற்குதான், நாங்கள் இந்திய ஒருமை பாட்டையும், தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்தோமா. நாட்டை இரண்டாகவும், மூன்றாகவும் பிளக்க தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கதான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறோமே? தவிர நாட்டை பிரித்து பார்க்க அல்ல. உன் சுயநலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பாய்.

அதன்பிறகு, மாவட்டத்தை பிரித்து கொடு என்று கேட்பாய். என்ன தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும். உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்த ஆட்சியாளரின் தவறு. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீங்களா? நாட்டு பற்றை வளர்க்க போராடி கொண்டு இருக்கும் நாங்கள் என்ன இழிச்சவாயன்களா? நீ ஆம்பளையா இருந்தா ஒரு நாள் வீதியில் நின்று தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடி பாரு உன் வாயாலேயே வந்த மாதரம் என்று சொல்ல வைப்போம் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வி.சி.க. நிர்வாகி மணிமாறன் என்பவர் குருமூர்த்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை மிரட்டியிருக்கிறார். இச்சம்பவம், தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்விற்கு, தனது கடும் கண்டனத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். மேலும், குருமூர்த்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு தாமும் தனது கட்சி தொண்டர்களும் பக்க பலமாக இருப்போம் என்று உறுதி அளித்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க.வின் மூத்த ஆபாச பேச்சாளரான வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் ;

நீங்கள் சொல்லும் நபர் இராணுவ வீரரல்ல: CRPF (central Reserve police force) எனப்படும் துணை ராணுவத்தை சார்ந்தவன். நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவை விமர்சித்திருப்பது ராணுவ விதிகளுக்கு எதிரானதாகும். அதுவும் அவன் இருக்கும் இடத்தின் லொகேசனை பகிர்ந்திருப்பது தேச துரோகம். அப்படிப்பட்ட தேசத்துரோகிக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுனரை சந்தித்திருப்பது இழிவான விளம்பரத்துக்காகவே! இதில் ஆளுனருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவரால் என்ன செய்ய முடியும்? என வன்னியரசு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதில், யார்? தேசத்துரோகி என்பதை கீழ்கண்ட செய்தியின் மூலம் நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய – சீனா இடையில் கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 21 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின், இந்த அத்துமீறிய செயலை ஒட்டு மொத்த தேசமும் கண்டித்தது. இந்திய எல்லை கோட்டினை தாண்டி வந்து அடாவடி செய்த சீனா குறித்த காணொளியை இந்திய ராணுவம் வெளியிட்டு இருந்து. இதுகுறித்தான, செய்தியினை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. எனினும், அக்காணொளி பொய்யாக இருக்க கூடும் என்று வி.சி.க. எம்.பி. கூறியது தான் கொடுமையிலும் கொடுமை.

இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசியை எங்களுக்கு கொடுங்கள் என்று வல்லரசு நாடுகள் போட்டி போட்டு கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டன. பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு செய்தி பரப்பியவர் இதே திருமாவளன் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இவ்வாறாக, தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை வளர்க்கும் விதமாகவும் தொடர்ந்து பேசி வருபவர் இதே நபர் என்பதுதான் கசப்பான உண்மை.

வி.சி.க. எம்.பி. திருமாவளவனுக்கும் சேர்த்து, இந்திய எல்லையில் பனியிலும், மழையிலும் எல்லையை பாதுகாத்து நிற்கும் தமிழக ராணுவ வீரர் குருமூர்த்தி தேசத்துரோகியா? வாழும் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் வி.சி.க. தலைவர் தேசத்துரோகியா? என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர் என்பதை ஆபாச பேச்சாளர் வன்னியரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Ethirajan Srinivasan 🇮🇳🚩 on Twitter: "Thirumavalavan with mass murderers  of TAMILS! Madani is a Coimbatore serial blasts & Bangalore serial  blasts mastermind. Rajapaksa killed 1.5 Laks TAMILS. Thirumavalavan wants  to demolish HINDU
Image

Share it if you like it