கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். ஆலோசனை கூட்டம் முடிந்து காரில் சென்ற விசிக உறுப்பினர்கள் சிலர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விசிக உறுப்பினர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது காரை ஏற்றி கொலை முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விசிக உறுப்பினர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்துறையில் பிடித்து கொடுத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
https://x.com/NewsTamilTV24x7/status/1759489330081636379?s=20