மாணவிக்கு பாலியல் தொல்லை…வி.சி.க. நிர்வாகி கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை…வி.சி.க. நிர்வாகி கைது!

Share it if you like it

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.சி.க. நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருப்பவர் மணிமாறன். இவர், அப்பள்ளியில் பயின்று வந்த 8-ம் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், உரிய நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள், இ.சி.ஆரில் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர். நிலைமை எல்லை மீறியதை தொடர்ந்து மாபல்லபுரம் மகளிர் போலீசார் மணிமாறனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லத்தூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it