விசிக-வின் பெயரையோ, கொடியையோ, தோழமை கட்சிகள் புறக்கணித்தால் வருத்தப்பட வேண்டாம் – திருமா அட்வைஸ்!

விசிக-வின் பெயரையோ, கொடியையோ, தோழமை கட்சிகள் புறக்கணித்தால் வருத்தப்பட வேண்டாம் – திருமா அட்வைஸ்!

Share it if you like it

எதிர்வருகின நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணித்தால் தொண்டர்கள் களங்க வேண்டாம் என திருமாவளவன் கூறியிருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடங்கமறு, அத்து மீறு, திமிரி எழு, என்று உணர்ச்சி பொங்க பேச கூடியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். மேடைகளில் ஆவேசமாக பேசினாலும் தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் வி.சி.க-வை ஒரு பொருட்டாக இன்று வரை மதிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. என தமிழக காவல்துறைக்கு எதிராக வி.சி.க மூத்த தலைவர் வன்னியரசு சமீபத்தில் பொங்கி இருந்தார்.

அந்த வகையில், எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகைப்படத்தையோ, கொடியையோ, புறக்கணித்தால் விடுதலை சிறுத்தைகளின் அடையாளம் மறைந்து விடாது எனவே தொண்டர்கள் யாரும் வருதப்பட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் சக்தியாக வளர முடியாது என்று முன்பு ஒருமுறை திருமாவளவன் வி.சி.க தொண்டர்களுக்கு இதே போன்றதொரு அறிவுரையை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it