தலைவியை தொடர்ந்து, ஆள் கடத்தலில் ஈடுபட்ட வி.சி.க. நிர்வாகிகள்!

தலைவியை தொடர்ந்து, ஆள் கடத்தலில் ஈடுபட்ட வி.சி.க. நிர்வாகிகள்!

Share it if you like it

சிதம்பரத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட வி.சி.க. நிர்வாகியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், சிதம்பர நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார். தம்மை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த ஹிந்துக்களுக்கு செய்த நன்மையை விட, அச்சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்துவதையே வழக்கமாக கொண்டவர். இதன் பின்னணியில், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப, அக்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

இதனிடையே, வி.சி.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி சுதா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதாவது, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ஞானமணி. இவர், தச்சு தொழில் செய்து வருபவர். இவரை, யாரே காரில் கடத்தி சென்று இருக்கின்றனர். இதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், தமிழ் அழகன், வேலுமணி, என இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து, அவர்கள் கூறியதாவது ;

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவி சுதாவிடம், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை ஞானமணி கடனாக பெற்று இருக்கிறார். உரிய நேரத்தில், அவரால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், சுதாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து, ஞானமணியிடமிருந்து எப்படியாவது? கொடுத்த கடனை திரும்ப பெற்று விட வேண்டும் என்பதற்காக, வி.சி.க.வின் ஒன்றிய செயலாளர் ரவியின் துணையுடன் ஞானமணியை தாங்கள் கடத்தியாக அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க. பிரமுகர்கள் உட்பட நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சிதம்பரத்தை சேர்ந்தவர் ஐமால் மொய்தீன். இவர், கடந்த 2017 – ஆம் ஆண்டு தனது சொந்த கட்டிடத்தை காஜா மொய்தீன் என்பவருக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார். இவ்விவகாரத்தில், இருவருக்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜமால் மொய்தீன் வி.சி.க.வை சேர்ந்த தனது மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து காஜா மொய்தீனை காரில் கடத்தி இருக்கிறார். அந்த வகையில், சென்னை நீலாங்கரை அருகே கார் சென்று உள்ளது. அப்போது, சோதனை சாவடியில் இருந்த காவலர்களிடம், தம்மை காப்பாற்றுமாறு காஜா மொய்தீன் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் அந்த காரை மடக்கி அவரை மீட்டுள்ளனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it