மோடி ஆட்சியில் எங்கும் நேர்மை, எதிலும் நேர்மை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் ‘ஓப்பன் டாக்’!

மோடி ஆட்சியில் எங்கும் நேர்மை, எதிலும் நேர்மை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் ‘ஓப்பன் டாக்’!

Share it if you like it

பிரதமர் மோடி ஆட்சியில் எல்லாமே நேர்மையாக நடக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல்.திருமாவளவன். சிதம்பரம் பார்லிமென்ட் தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். இவர்தான் பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் எல்லாமே நேர்மையாகவும், நியாயமாகவும் நடப்பதாக, தன்னையும் அறியாமல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததுபோல பேசியிருக்கிறார். திருமாவளவன் பேசியது இதுதான்…

“ஒரு காலத்தில் எம்.பி.க்களின் கையெழுத்துக்கு அதிக மரியாதை இருந்தது. பரிந்துரைக் கடிதங்கள் வழங்க ஒரு கையெழுத்துக்கு 25 ரூபாய் வாங்குவார்கள். நாளொன்றுக்கு 250 முதல் 300 கையெழுத்துகள் வரை போடுவார்கள். நான் வெற்றுக் காகிதங்களில் கூட கையெழுத்து போட்டிருக்கிறேன். காரணம், என்னை மீறி என்ன நடந்து விடப்போகிறது? என்பதுதான்.

அதேபோல, முன்பெல்லாம் எம்.பி. கையெழுத்து போட்டால், தொலைபேசி இணைப்பு, கேஸ் இணைப்பு, பெட்ரோல் பங்க் உரிமம் என பலவும் கிடைக்கும். எம்.பி. கடிதம் கொடுத்திருக்கிறார் என்பதால் கலெக்டர் வேலை கொடுப்பார். எம்.பி.க்கு அவ்வளவு மரியாதை இருந்தது. ஆனால், இப்போது எம்.பி. என்றால் தம்பி என்கின்றனர். எந்த மரியாதையும் இல்லை. எந்த அரசு வேலைக்குச் சென்றாலும் ரெக்ரூட்மென்ட் முறைதான். ஆகவே, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் எம்.பி.க்கள் பணம் வாங்கிக் கொண்டு கடிதம் கொடுத்தார்கள். இதனால், சட்ட விரோதமாக வேலை உள்ளிட்ட பணிகள் கிடைத்தன. ஆனால், மோடி ஆட்சியில் அனைத்தும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கிறது. இதனால், எம்.பி.க்கள் கடிதம் கொடுத்தாலும் எந்த வேலையும் நடக்காது என்று மறைமுகமாக மோடியை பாராட்டி இருக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it