வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான வன்னியரசு மீது பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு காவல்துறையில் புகார் மனு..!

வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான வன்னியரசு மீது பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு காவல்துறையில் புகார் மனு..!

Share it if you like it

பிரபல ஊடகமான நியூஸ் 18 அண்மையில் ஊடக விவாதத்தை நடத்தியது. இதில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம், வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு மற்றும் தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் சரவணன் மற்றும் நித்யானந்தம் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பா.ஜ.க-விற்கு எதிராகவும் இன்று வரை பேச கூடியவர் வன்னியரசு.

பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உண்மைக்கு புறம்பான வகையில் அவரை கொலைகாரர் என்று வழக்கமான தனது அழுக்கு எண்ணத்தை வி.சி.க-வின் ஆபாச பேச்சாளர் வன்னியரசு வெளிப்படுத்தியுள்ளார்.

கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கருத்து வேறுபாடு, எது வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுமக்கள் பார்த்து கொண்டு இருக்கும் ஊடகத்தில் பொய்யான கருத்தை கூறி சமூகத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்க முயன்ற வன்னியரசை ஊடக நெறியாளர் கண்டிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ செய்யாமல் தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் போல நடந்து கொண்டார் என்பது நிதர்சனம்.

இந்நிலையில் வி.சி.க-வின் ஆபாச பேச்சாளர் வன்னியரசு மீது பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு & மாவட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it