அரசியலுக்காக தி.மு.க. எதையும் செய்யும் வடிவேலாக மாறிய வீரமணி!

அரசியலுக்காக தி.மு.க. எதையும் செய்யும் வடிவேலாக மாறிய வீரமணி!

Share it if you like it

கீ.வீரமணி தலைமையில் கடந்த 2019 – ஆம் ஆண்டு அரசியல் பயிற்சி பட்டறை எனும் நிகழ்ச்சி பெரியார் திடலில் நடைபெற்று இருக்கிறது. அப்போது, எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் திராவிடர் கழகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று தோழர் ஒருவர் கேள்வி ஒன்றினை முன்வைக்க, இதற்கு கீ. வீரமணி கூறியதாவது; என்ன பெரிய வித்தியாசம் பெயர்தான் வித்தியாசம் என்று கூறி விட்டு சிரிக்கிறார். அவர்களை பொறுத்த வரை அரசியல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறுபவர்கள். அரசியலுக்கு போய்விட்டால், ஒவ்வொரு நேரத்திற்கும் தகுந்தாற் போல ஒவ்வொரு ராகம் வாசிக்க வேண்டும்.

ஒரே, ராகம் வாசிக்க வேண்டும் என்றால் அது திராவிடர் கழகம் தான், அதுதான் நமக்கு மிக முக்கியம். அவர்கள் ஓட்டுக்காக மாற கூடியவர்கள், நாமம் போட்டால் வைஷ்ணவ பெருமை பேசுவான். விபூதி பூசினால் சைவ பெருமை குறித்து பேசுவான். ஆனால், நாம் பகுத்தறிவாதி என்போம். நாளை, நாமே அரசியல்வாதியாக மாறினால் நம்ம கதியே அதுபோல தான் மாறும். ஏனெனில், முட்டாள்களிடம் ஓட்டு வாங்க வேண்டியது என்பது தான் அதில் மிக முக்கியம். (ஓட்டு போட்ட தமிழக மக்கள் முட்டாள்களாம்) யார்? காசு அதிகம் கொடுத்து ஓட்டு வாங்குவது என்பதுதானே இப்போ போட்டியாக இருக்கு. அவர்களுக்கும், நமக்கும் 100% சதவீதம் ஒத்துபோகும் என்று கூற முடியாது. ஆனால், தேர்தல் நேரத்தில் அவர்கள் எப்படி? செயல்படுகிறார்கள் என்பதை குறித்து நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நாம், அவர்களின் தாய் கழகம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒரு அடி கூட வாங்காமல் தி.மு.க.வின் தில்லு முல்லுவை தமிழக மக்களிடம் கூறிய வீரமணியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் என நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் முட்டாள்: வீரமணி காட்டம்

தி.மு.க.


Share it if you like it