சங்கிகளுக்கு எரிச்சல் இல்லை: இதுபோன்ற அறிவில்லாத தத்திகளை பார்க்கும் போது வருத்தம்தான் வருகிறது – வேலூர் இப்ராஹிம் பதிலடி!

சங்கிகளுக்கு எரிச்சல் இல்லை: இதுபோன்ற அறிவில்லாத தத்திகளை பார்க்கும் போது வருத்தம்தான் வருகிறது – வேலூர் இப்ராஹிம் பதிலடி!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வேலூர் இப்ராஹிம் தரமான பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை துறைமுகம் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, உதயநிதி பேசும் போது இவ்வாறு கூறினார் ; “திராவிட மாடல் என்றால் என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு, எப்போதுமே மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பார். ஆனால், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்.

இதோ தற்போது இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு “அல்லேலூயா” என்று வாழ்த்துச் சொல்கிறார். அமைச்சர் சேகர்பாபு சமூக நல்லிணக்கத்தோடு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுதான் சமூக நீதி ஆட்சி. இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியைத்தான் முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். நானும் கிறிஸ்தவன்தான். நான் படித்தது டோன் போஸ்கோ பள்ளியில். கல்லூரி படித்தது லயோலா கல்லூரியில். நான் காதலித்து திருமணம் செய்தது ஒரு கிறிஸ்தவ பெண்ணை. இதை சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். இதைக் கேட்டால் சங்கிகளுக்கு வயிறு எரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளருமான வேலூர் இப்ராஹிம் அமைச்சர் உதயநிதிக்கு தரமான பதிலடியை கொடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it