50 ஆண்டுகால திராவிட ஆட்சி: அதற்கு மாற்றாக அண்ணாமலை? – வேல்முருகன் ஓபன் டாக்!

50 ஆண்டுகால திராவிட ஆட்சி: அதற்கு மாற்றாக அண்ணாமலை? – வேல்முருகன் ஓபன் டாக்!

Share it if you like it

தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக இருப்பவர் வேல்முருகன். இவர், அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பேசி உள்ளார் ;

பா.ஜ.க. அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று சொல்கிறார்கள். இதற்கு, காரணம் அ.தி.மு.க.வின் பலவீனமா என்று நிருபர் ஒருவர் கேட்கிறார். இதற்கு, வேல்முருகன் கூறியதாவது ; கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பா.ஜ.க.விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

கலைஞர் கருணாநிதி பிறந்த திருவாரூரில் பா.ஜ.க.விற்கு கூடிய கூட்டம் என்ன? அதே மாவட்டத்தில் தற்போது கூடிய கூட்டம் என்ன? நீலகிரியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.விற்கு கூடிய கூட்டம் என்ன? இப்போது கூடிய கூட்டம் என்ன? 50 ஆண்டுகால திராவிட ஆட்சியை பார்த்தவர்கள் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி அதுவும் ஒரு தமிழர் தலைமையின் கீழ் செல்வோம் என்று ஒரு குறிப்பிட்ட மக்களும், இளைஞர்களும் செல்வது உண்மை என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பா.ஜ.க.வின் வளர்ச்சி குறித்து அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் இவ்வாறு கூறியிருந்தார் ;

நம்முடைய எதிரி நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவன் அது அ.தி.மு.க. அவனை சந்தித்தோம். பா.ஜ.க. இங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களிடம், பண பலம், அதிகார பலம் உள்ளது. அவர்களுக்கு, இணையாக நாம் சண்டை செய்ய வேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் நம் பூத் கமிட்டி பலமாக இருக்க வேண்டும். இந்த கமிட்டியை ஜாக்கிரதையாக கொண்டு வர வேண்டும் என அண்ணாமலையை மனதில் நினைத்து தி.மு.க.வின் மூத்த அமைச்சர் கதறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it