VHP நகர தலைவருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அவரின் மரக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்…!

VHP நகர தலைவருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அவரின் மரக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்…!

Share it if you like it

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு மாவட்ட VHP அலுவலகம் திறந்த நிலையில், VHP நகர தலைவர் அவர்கள் மரக்கடையை, சமூக விரோதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சில மாதங்களுக்கு முன்பாக வி.ஹெச்.பி-க்கு நகர தலைவராக அழகு அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். அதனை தொடர்ந்து அவர் சில நாட்கள் கழித்து விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தை தனது பகுதியில் திறந்தார்.

தமிழகத்தில் இசுலாமியர்கள் அதிகம் உள்ள பகுதியாக, அதே சமயம் சமூக விரோதிகளின் புகலிடமாக புளியங்குடி மாறி வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால், கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவிய காலகட்டத்தில் அதிகளவு மக்கள் கூடுகிறார்கள் என்று இஸ்லாமியரின் மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கின்றார்கள், அந்த சீல் வைத்து அரை மணி நேரத்திற்குள்ளேயே ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து அந்த சீலை அகற்றி மீண்டும் தொழில் செய்த நிகழ்வு மட்டுமில்லாது ஏராளமான சம்பவம் இன்று வரை அங்கு நிகழந்து வருவது கசப்பான உண்மை.

இப்படி விதிகளை மீறிய 10 இஸ்லாமிய கடைகளுக்கு அதிகாரிகள் வைத்த சீலை இஸ்லாமியர்களே அகற்றி இன்று வரை தொழில் செய்து கொண்டு தான் உள்ளனர், அதிகாரிகளால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்ல அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள சாலையை உடைத்து தண்ணீர் குழாய் இணைப்பு கொடுத்து நகராட்சிக்கு எந்த விதமான வரியும் செலுத்தாத அளவுக்கு அராஜகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அழகு அவர்களின் மரக்கடையில் மர்ம நபர்‌கள் ஏறிக் குதித்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் முற்றிலும் எறிந்து நாசமாகி விட்டது, காவல்துறையினர் ஆய்வு செய்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இப்பொழுது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை

இந்த மரக்கடைக்கும், விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்திற்கும்‌ வெறும் 50 மீட்டர் தூரமே உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சம்பவம் என்னவென்றால் இங்கு ஹிந்து அமைப்பினரை கொலை செய்த போதும், ஹிந்து கடைகளை தீ வைத்து எரித்த போதும் மின்சாரம் அணைக்கப்பட்டே சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன. அதே போலத்தான் இந்த சம்பவமும் தற்பொழுது நிகழ்ந்துள்ளது.

ஹிந்து அமைப்புகள் வலிமையாவதை கூட தாங்க முடியாத அளவிலே இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடந்து கொள்கின்றனர். இதே நிலை நீடித்தால் ஹிந்துக்கள் எப்படி அப்பகுதிகளில் வசிக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it