சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய எல்லை பகுதியான கல்வான் பள்ளதாக்கு பகுதியில் அத்தூமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை தடுக்கும் பொழுது. இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிரை பாரத தேசத்திற்காக தந்ததை ஒவ்வொரு இந்திய குடிமகனும் மறக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்பரேஷ்னில் பணி புரிந்து ஓய்வு பெற்றவரும் பா.ஜ.க உறுப்பினருமான கணபதி அவர்கள் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் வீரமணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்திற்கு சென்னையில் உள்ள தனது ஒரு கிரவுண்ட் நிலத்தை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்பு வழங்கியுள்ளார். அடுத்தவன் பட்டா நிலத்தில் கொட்டா போட துடிக்கும் கட்சிகள் உள்ள இந்த காலத்தில் பா.ஜ.க உறுப்பினர் சேவை போற்றுதலுக்குறியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.