கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கைப்பற்ற முயற்சித்ததாக இந்து முன்ணனி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கள்ளக்குறிச்சி மாவட்டம் M.குன்னத்தூர் பகுதியில் தனியார் கோவில் ஒன்றில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த ஒன்றரை கிலோ தங்க நகைகளை உள்ளூர் மக்களின் பிரச்சனையை பயன்படுத்தி கைப்பற்ற முயற்சித்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்துள்ளனர்.
தங்கள் கட்டுப்பட்டில் உள்ள கோயில்களையே சரியான முறையில் நிர்வாகிக்க முடியாத அறநிலையத்துறை குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை போல தனியார் கோயிலில் உள்ள சொத்துக்கள் மற்றும் நகைகளை தங்கள் வசமாக நினைப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது.