தமிழக அரசியல்வாதிகளை பொறுத்தவரை இல்லாத ஒன்றை இருப்பதுபோல மிகைப்படுத்தி பேசுவதையும், இருக்கும் ஒன்றை இல்லாததுபோல சிறுமைப்படுத்தி பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திராவிடக் கட்சிகளின் பொய், பித்தலாட்டங்கள் கணக்கிலடங்காதவை. குறிப்பாக, திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அதன் கூட்டாளிகள், இனம், மொழி ஆகியவை தொடர்பாக அள்ளி விடும் கட்டுக்கதைகள் ஏராளம். அப்படித்தான் சில நூற்றாண்டுகளாக மட்டுமே நாங்கள் இந்தியர்கள், 2,000 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் என்று வரலாற்றை திரித்து கூறிவருகின்றனர். ஆனால், உண்மையில் 4,000 வருடங்களுக்கு முன்பே நாம் இந்தியர்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார் எழுத்தாளர் பா.பிரபாகர் அவர்கள். இதன் மூலம், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்கிற பழமொழி மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திராவிடர் கழகம், தி.மு.க. ஆகியவற்றின் முகத்திரை கிழிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழு காணொளியை காண்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.