அபிஷேகத்தை பற்றி மிக இழிவாக பேசிய விஜய் சேதுபதி – தொடரும் வன்மம் நிறைந்த பேச்சு!

அபிஷேகத்தை பற்றி மிக இழிவாக பேசிய விஜய் சேதுபதி – தொடரும் வன்மம் நிறைந்த பேச்சு!

Share it if you like it

ஹிந்து மதத்தின் நம்பிக்கை, வழிபாட்டு முறை, மற்றும் சடங்குகளை தி.க, திமுக, மற்றும் சில்லறை போராளிகள் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். தற்பொழுது திரைதுறையை சார்ந்த சத்திய ராஜ், கமல், ஜோதிகா, அண்மையில் விஜய் சேதுபதி என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக இருக்கும் தமிழகத்தில். ஒரு குறிப்பிட்ட மதத்தினைரை குறி வைத்து தொடர்ந்து புண்படுத்தி. மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி வரும் இவர்களின் சேட்டைகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக மக்கள் மத்தியில் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் விஜய்சேதுபதி சன் டிவி சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள் குளிப்பதை காட்டுவதை போல உடை மாற்றுவதை மறைப்பது ஏன்? என்று அருவருக்க வகையில் கூறியிருந்தார்.

விளம்பரத்திற்காக தொடர்ந்து ஹிந்துக்களின் மனம் புண்படும் படி பேசி வரும் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it